• Download mobile app
06 Feb 2026, FridayEdition - 3649
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் கால்நடை மருத்துவர்கள் வீடுகளுக்கே சென்று கால்நடைகளுக்கு சிகிச்சை

April 30, 2020 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் கால்நடை மருத்துவர்கள் வீடுகளுக்குச் சென்று சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் அனைத்து கால்நடை மருந்தகங்களும் இயங்குகின்றன.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. மக்கள் அத்தியாவசிய தேவைக்கு மட்டும் வெளியே சென்று வருகின்றனர்.இந்நிலையில்,ஊரடங்கு காலத்தில் கால்நடை மருத்துவர்கள் வீடுகளுக்கே சென்று கால்நடைகளுக்கு அவசர சிகிச்சை செயற்கை முறை கருவூட்டல் சேவைகளைச் செய்து வருகின்றனர்.

கோவை மாநகராட்சி சுந்தராபுரம் கால்நடை மருந்தகம் உதவி இயக்குநர் கோவை மரு.இளங்கோ மற்றும் உதவி இயக்குநர் கால்நடை நோய் புலனாய்வு பிரிவு மரு.கீதா ஆகியோரால் நேற்று ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வின் போது, கால்நடை உதவி மருத்துவர் மரு.ரத்தீஷ் கண்ணன் உடனிருந்தார்.

மேலும் படிக்க