January 1, 2020
உலகம் முழுவதும் ஆங்கில புதுவருடப் பிறப்பை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது .இதன் ஒரு பகுதியாக கோவையிலும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன.
கோவையில் உள்ள தேவாலயங்களில் புத்தாண்டை வரவேற்கும் வகையில் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.சிறப்பு திருப்பலி நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கானவர்கள் பங்கேற்றனர்.கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள நூற்றாண்டு பழைமையான புனித மைக்கேல் தேவாலயத்தில் கோவை மாவட்ட ஆயர் தாமஸ் ஆக்குவினாஸ் தலைமையில் சிறப்பு திருப்பலி நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து ஆங்கிலப் புத்தாண்டை போற்றும் விதமாக பாடல்கள் பாடப்பட்டது. நள்ளிரவு 12 மணிக்கு துவங்கிய திருப்பலி மற்றும பிராத்தனை நிகழ்ச்சிகள் அதிகாலை 2 மணி வரை தொடர்ந்து நடைபெற்றது. இதனை தொடர்ந்து எல்லா மதத்தினருக்கும் , அண்டை வீட்டாருக்கும் கேக் மற்றும் உணவு பொருட்களை வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டு அனைத்து மத்த்தினருடன் இணைந்து இந்த ஆங்கில புதுவருடப் பிறப்பை உற்சாகமாக மகிழ்ந்து கொண்டாடி வருகின்றனர்.