• Download mobile app
20 May 2025, TuesdayEdition - 3387
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் கல்லூரி மாணவர் 5 மணி நேரம் இசைத்து சாதனை

October 10, 2020 தண்டோரா குழு

கோவையில் கல்லூரி மாணவர் கால்களில் சலங்கை அணிந்தபடி பறை,பெரிய மேளம் மற்றும் துடும்பு ,நையாண்டி ஆகிய கிராமிய தோல் இசைக் கருவிகளை தொடர்ந்து 5 மணி நேரம் இசைத்து சாதனை படைத்துள்ளார்.

கோவை சூலூர் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் விமல்ராஜ்.தந்தையை இழந்தவரான இவர், கல்லூரியில் படித்து கொண்டே பீளமேடு பகுதியில் கிராமிய புதல்வன் கலை குழுவில் சேர்ந்து கிராமிய இசை கருவிகளை வாசிக்கும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.இந்நிலையில் குழுவை சேர்ந்த டாக்டர் கலையரசனின் பயிற்சியில், மாணவன் விமல்ராஜ் தனது உலக சாதனை முயற்சியாக,கால்களில் சலங்கை அணிந்தபடி கிராமிய தோல் இசை கருவிகளான, பறை , பெரிய மேளம், துடும்பு மற்றும் நையாண்டி என ஐந்து இசைகருவிகளை தொடர்ந்து ஐந்து மணி நேரம் வாசித்தபடி சாதனை புரிந்துள்ளார்.

இவரது இந்த சாதனை நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.சலங்கை ஒலியுடன் தோல் இசைக் கருவிகளை தொடர்ந்து ஐந்து மணி நேரம் இசைத்த இளைஞரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

மேலும் படிக்க