• Download mobile app
04 May 2024, SaturdayEdition - 3006
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் கண்டெய்னர் லாரியில் பணம் இருப்பதாக வதந்தி கிளப்பி இருவர் கைது

April 10, 2019 தண்டோரா குழு

கோவை ஆத்துப்பாலம் அருகே கண்டெய்னர் லாரியில் பணம் இருப்பதாக வதந்தி கிளப்பி இடையூறு செய்ததாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொறுப்பாளர் மற்றும் மற்றொருவரை போலீசார் கைது செய்து நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கோவை ஆத்துப்பாலம் அருகே கன்டெய்னர் லாரியில் பணம் இருப்பதாக எழுந்த தகவலின் அடிப்படையில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடினர். மக்கள் நீதி மைய பொறுப்பாளர் இந்த பிரச்சனைக்கு முக்கிய காரணமாக செயல்பட்டவர் என கோவை மாநகர காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் போலீசார் இன்று காலை மக்கள் நீதிமய்ய உறுப்பினர் முகமது சாஜீத்தை அவரது வீட்டில் இருந்து கைது செய்து தாக்கியதாக கூறப்படுகிறது.அதேபோல போத்தனூர் பகுதியைச் சேர்ந்த பெரோஸ்கானையும் போலீசார் கைது செய்தனர்.

இதையடுத்து மக்கள் நீதி மைய உறுப்பினர் சாஜித்தை போலீசார் கோவை அரசு மருத்துவமனையில் அரசு அனுமதித்து பின்னர் சிகிச்சை அளித்தனர்.இதையடுத்து போலீசார் இருவரையும் கோவை 7 வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி பாண்டியன் முன்னிலையில் ஆஜர் படுத்தினர்.இவரை வருகின்ற 23 ம் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் இருவரையும் கோவை மத்திய சிறையில் அடைத்தனர். நீதிபதி குடியிருப்பு முன்பாக மக்கள் நீதி மையத்தின் நூற்றுக்கணக்கானோர் கூடியதால் இந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் படிக்க