• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் கட்டுமான பொருட்களின் விலையேற்றத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

February 2, 2021 தண்டோரா குழு

கோவையில் கட்டுமான பொருட்களின் விலையேற்றத்தை கட்டுபடுத்த வேண்டும், முத்திரை தாள் கட்டணத்தை குறைத்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கட்டுமானம் மற்றும் மனைத்தொழில் கூட்டமைப்பின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கட்டுமானம் மற்றும் மனை தொழில் கூட்டமைப்பு சார்பாக தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.இதன் ஒரு பகுதியாக கோவை ஆத்துப்பாலம் பகுதியில். கூட்டமைப்பின் மாவட்ட தலைவர் முகம்மது ரபீக் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், ராக்கி கிருஷ்ணன் வரவேற்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தை சுகுணா புரம் பகுதி கழக பொறுப்பாளர் மு. ராஜேந்திரன் ,மற்றும் கூட்டமைப்பின் மாநில நிர்வாகிகள் இராம வெங்கடேசன்,பாலகிருஷ்ணன், தணிகை ராஜேந்திரன்,இராதா மணி ஆகியோர் கண்டன உரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் கட்டுமானத்துறையில் பயன்படுத்தப்படும் சிமெண்ட் மணல் கம்பி உள்ளிட்ட பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், கட்டுமான பணிகள் பாதிப்படைந்து, கட்டுமான பணியாளர்கள் வேலையில்லாமல் தவித்து வருவதால் ,கட்டுமான பொருட்களின் விலையேற்றத்தை கட்டுபடுத்த விலை நிர்ணய குழுவை அமைக்க வேண்டும்,முத்திரைத்தாள் கட்டணத்தை மற்ற மாநிலங்களில் உள்ளது போல 5 சதவீதமாக குறைத்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மணல் லாரி உரிமையாளர்கள் சங்க பொதுச்செயலாளர் மணி,முன்னால் கவுன்சிலர் முருகேசன் அய்யாசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க