• Download mobile app
02 May 2025, FridayEdition - 3369
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் கட்டிடங்களில் தண்ணீர் தேங்கி இருந்ததற்காக இதுவரை ரூ.1 லட்சம் வரை அபராதம்

December 15, 2021 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த சுகாதார துறை சார்பில் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கட்டிடங்களில் தண்ணீர் தேங்கி இருந்ததற்காக இதுவரை ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சுகாதார துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

கோவை மாநகராட்சியில் 21 பேரும், ஊரக பகுதியில் 6 பேர் என மொத்தம் 27 பேர் தற்போது டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்கோவை மாநகராட்சி பகுதியில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த வீடு, வீடாக சென்று ஆய்வு செய்யும் பணியில் 800 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

தற்போது காய்ச்சல் அதிகரித்து வருவதால் கூடுதலாக 200 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் வீடுகள், வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று ஆய்வு செய்வார்கள்.அப்போது அந்த பகுதியில் தண்ணீர் தேங்கி இருந்தால், அவற்றின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிப்பதுடன், கொசுப்புழுக்களை அழிக்க அபேட் எனும் மருந்தை ஊற்றுகின்றனர்.

வீடுகள், கல்வி நிலையங்கள், வர்த்தக நிறுவனங்களில் தண்ணீர் தேங்கி இருந்ததற்காக இதுவரை ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. ஊரக பகுதிகளில் ஊராட்சிக்கு 2 பேர் வீதமும், பேரூராட்சி பகுதியில் 10 பேர் வீதமும் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க