• Download mobile app
23 May 2025, FridayEdition - 3390
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் கடந்த ஒரு வாரத்தில் 10 காவலர்களுக்கு கொரோனா தொற்று

July 13, 2020 தண்டோரா குழு

கோவையில் கடந்த ஒரு வாரத்தில் 10 காவலர்களுக்கு கொரோனா தொற்று
உறுதியாகியுள்ளது.

கோவையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. மொத்த பாதிப்பு 1261 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையில்,நேற்று துடியலூரை சேர்ந்த 5 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனைத் தொடர்ந்து மற்ற காவலர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இன்று மேலும் 2 காவலர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதைப்போல் கடந்த சில நாட்களுக்கு முன்பு போத்தனூர் காவல் நிலையத்தில் பெண் காவலர் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து போத்தனூர் காவல் நிலையம் தற்காலிமாக அருகில் உள்ள திருமண மண்டபத்திற்கு மாற்றப்பட்டது. பின்னர் மற்ற காவலர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இன்று ஒரு காவலருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.அதைபோல் சூலூரிலும் ஒரு காவலருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், கோவையில் கடந்த ஒரு வாரத்தில் துடியலூர் காவல் நிலையத்தில் 7 பேருக்கும், போத்தனூரில் 2 பேருக்கும், சூலூரில் ஒருவருக்கும் என 10 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.இது காவலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க