• Download mobile app
10 Sep 2025, WednesdayEdition - 3500
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் கஞ்சா வேட்டையில் 19 பேர் கைது

March 18, 2023 தண்டோரா குழு

கோவை மாவட்டம் முழுவதும் நேற்று போலீசார் கஞ்சா வேட்டையில் ஈடுபட்டு 19 பேரை கைது செய்து 3.2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட போலீஸ் எஸ்பி பத்ரிநாராயணன் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். இதன் தொடர்ச்சியாக நேற்று எஸ்பி உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் ஒவ்வொரு காவல் நிலையங்களிலும் கஞ்சா வேட்டை நடைபெற்று ஒரே நாளில் 19 கஞ்சா குற்றவாளிகள் மீது 14 வழக்குகள் பதிவு செய்தும், அவர்களிடமிருந்து சுமார் 3.240 கிலோ கிராம் எடையுள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கஞ்சா விற்பனையில் ஈடுபடும் குற்றவாளிகள் மீதான கஞ்சா வேட்டை தொடர்ந்து நடைபெறும் என போலீஸ் எஸ்பி கடுமையாக எச்சரித்துள்ளார். போதைப் பொருட்கள் குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ் அப் எண் 7708-100100 என்ற எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க