• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது

October 8, 2020 தண்டோரா குழு

கோவை செல்வபுரம் சொக்கம்புதூர் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சாதாரண உடையில் அங்கு சென்ற போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வாலிபர் ஒருவர் சந்தேகத்திற்கிடமாக அங்குமிங்கும் சுற்றி திரிந்து கொண்டிருந்தார். அவரை பிடித்து விசாரணை செய்தனர்.

அப்போது ஒரு கிலோ 200 கிராம் கஞ்சா விற்பனைக்கு வைக்கபட்டு இருந்தது தெரியவந்தது.இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்து போலீசார் வாலிபரிடம் மேற்கொண்டதில் அவர் போத்தனூர் பகுதியை சேர்ந்த தமிழரசன்(21) என்பது தெரியவந்தது. இதையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் தமிழரசனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதேபோன்று வடவள்ளி போலீசார் வீரகேரளம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் சந்தேகத்திற்கு இடமாக சுற்றி திரிந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது விற்பனைக்கு கஞ்சா வைக்கபட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசாரின் விசாரனையில் அந்த நபர் பீடம்பள்ளியை சேர்ந்த கோவிந்தன் என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் நீதிபதி முன் ஆஜர்படுத்தபட்டு சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்க