• Download mobile app
20 May 2025, TuesdayEdition - 3387
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது

October 8, 2020 தண்டோரா குழு

கோவை செல்வபுரம் சொக்கம்புதூர் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சாதாரண உடையில் அங்கு சென்ற போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வாலிபர் ஒருவர் சந்தேகத்திற்கிடமாக அங்குமிங்கும் சுற்றி திரிந்து கொண்டிருந்தார். அவரை பிடித்து விசாரணை செய்தனர்.

அப்போது ஒரு கிலோ 200 கிராம் கஞ்சா விற்பனைக்கு வைக்கபட்டு இருந்தது தெரியவந்தது.இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்து போலீசார் வாலிபரிடம் மேற்கொண்டதில் அவர் போத்தனூர் பகுதியை சேர்ந்த தமிழரசன்(21) என்பது தெரியவந்தது. இதையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் தமிழரசனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதேபோன்று வடவள்ளி போலீசார் வீரகேரளம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் சந்தேகத்திற்கு இடமாக சுற்றி திரிந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது விற்பனைக்கு கஞ்சா வைக்கபட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசாரின் விசாரனையில் அந்த நபர் பீடம்பள்ளியை சேர்ந்த கோவிந்தன் என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் நீதிபதி முன் ஆஜர்படுத்தபட்டு சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்க