April 18, 2019 தண்டோரா குழு
கோவை போத்தனூர் பகுதியை சேர்ந்த இளைஞரின் ஓட்டு வேறு நபர் போட்டு சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை பீளமேடு பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் பெங்கலூரில் ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். ஓட்டு போடுவதற்காக, இன்று காலை ரயில் மூலம் கோவைக்கு வந்துள்ளார். மதியம் 2 மணிக்கு ஒட்டு போட பீளமேடு பி.எஸ்.ஜி. தொடக்க பள்ளிக்கு சென்று ஆதார் அட்டை மற்றும் பூத் சிலிப்பை காட்டியுள்ளார்.
தேர்தல் முகவர்கள் ஆவணங்களை சரி பார்த்துவிட்டு வாக்களிக்க அனுமதி அளித்துள்ளனர். விரலில் மையும் வைக்கப்பட்டு இயந்திரத்தில் பட்டனையும் அளுத்தியுள்ளார். அதன் பின் அவரது வாக்கு ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுவிட்டதாகவும் இந்த வாக்கை ஏற்க மறுத்துவிட்டனர். அதனால் அதிர்ச்சி அடைந்த கார்த்திகேயன் முகவர்களுடன் வாக்குவாதம் செய்து, ஓட்டு போட்டே தீருவன் என்று கூறியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில்,49P தேர்தல் நடத்தை விதிகள், 1961 படி tender vote அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி மீண்டும் வாக்களிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டது.