• Download mobile app
16 May 2025, FridayEdition - 3383
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் ஒரே நாளில் 15 பெண்கள் உள்பட 55 பேர் வேட்பு மனு தாக்கல்

March 18, 2021 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்ட மன்ற தொகுதிகளுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 12ம் தேதி முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் நேற்று முன்தினம் வரை மாவட்டம் முழுவதும் 37 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். 4-வது நாளான நேற்று ஏராளமானோர் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

இதன்படி மேட்டுப்பாளையம் தொகுதியில் ஒரு பெண் உள்பட 8 பேரும், சூலூர் தொகுதியில் ஒரு நபரும், கவுண்டம்பாளையத்தில் 6 பேரும், கோவை வடக்கில் 3 பேரும், தொண்டாமுத்தூரில் ஒரு பெண், ஒரு ஆண் என 2 பேரும், கோவை தெற்கில் 5 பேரும், சிங்காநல்லூரில் 2 பெண்கள் உள்பட 6 பேரும், கிணத்துக்கடவில் 4 பெண்கள் உள்பட 10 பேரும், பொள்ளாச்சியில் 6 பெண்கள் உள்பட 9 பேரும், வால்பாறையில் ஒரு பெண் உள்பட 5 பேர் என மொத்தம் 55 பேர் வேட்பு மனு தாக்கல் செய்து உள்ளனர்.

கோவை மாவட்டத்தில் நேற்று வரை மொத்தம் 92 பேர் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்து உள்ளனர். வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணியுடன் வேட்பு மனு தாக்கல் நிறைவு பெறுகிறது.

மேலும் படிக்க