• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் ஒரே இடத்தில் 14 பேருக்கு கொரானா தொற்று – மேலும் 30 பேரை தேடிவரும் சுகாதார ஊழியர்கள்

July 16, 2020 தண்டோரா குழு

கோவையில் ஒரே இடத்தில் 14 பேருக்கு கொரானா தொற்று ஏற்பட்ட நிலையில் மேலும் 30 பேரை சுகாதார ஊழியர்கள் தேடிவருவது அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

கோவையில் கோவிட்-19 தொற்று வேகமாக பரவிவருகிறது. மக்கள் தேவையில்லாமல் வெளியே வரவேண்டாம், மேலும் முககவசம் அணிவதையும், கைகளை சோப்புகொண்டு நன்றாக அடிக்கடி கழுகுவதையும் உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்.சில தினங்களுக்கு முன் கோவை கரும்புக்கடை பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு கொரானா தொற்று உறுதி செய்ததை தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

மேலும் அந்த பகுதியில் மருத்துவ முகாம் அமைத்து அப்பகுதி மக்களுக்கு கொரானா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், கோவை கரும்புக்கடை இலாஹி நகர் பகுதியை சேர்ந்த 14 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், மேலும் 30 பேரை சுகாதார ஊழியர்கள் தேடிவருகிறார்கள். இது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அப்பகுதி முழுவதும். நோய் தடுப்பு மருந்துகள் தெளித்து வருகிறார்கள். மேலும் கோவை போத்தனூர் காவல் நிலைய ஆய்வாளர் மகேஸ்வரன். அந்த பகுதியில் மக்களிடையே ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.பொதுமக்கள் வெளியே சொல்லும்போது கவனமுடன் தங்களுடைய அன்றாட பணிகளை மேற்கொள்ள வலியுறுத்தி வருகிறார்கள்.

மேலும் படிக்க