• Download mobile app
09 Nov 2025, SundayEdition - 3560
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக, காற்றுடன் கொட்டி தீர்த்த கனமழை

June 13, 2020 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை துவங்கியதால், கோவை மாநகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில், கனமழையும், பல இடங்களில் மிதமான மழையும் நிலவிவருகின்றது.

கேரளா மாநிலத்தில், தென்மேற்கு பருவமழையானது. கடந்த 1-ந் தேதி தொடங்கிய நிலையில் தமிழகத்தை ஒட்டியுள்ள கேரள மாநிலத்தில் போதிய மழை பெய்யாமல் இருந்தாலும்,கோவை மாநகரில் நேற்று முதல் பலத்த மழை பெய்ய தொடங்கி உள்ளது.மேலும், கோவை மாவட்டத்தில் தொண்டாமுத்தூர், வடகோவை, வடவள்ளி, பூ மார்க்கெட், இரயில்வே நிலையம், காந்திபுரம், போன்ற பகுதிகளில், மிதமான மழை பெய்து வருகின்றது. காலை முதலே, லேசான மழை தூறலாக பெய்து வந்த நிலையில், வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ந்த காற்று வீசியது.

தொடர்ச்சியாக பல இடங்களில் கன மழை பெய்தது இதனால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையில் சில பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த ஆண்டு வானிலை ஆய்வு மையம் சார்பில் 190மில்லி மீட்டர் அளவுக்கும் மேலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.இதனால் தொண்டாமுத்தூர் பகுதிகளில் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் படிக்க