• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் எல்ஐசி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

January 8, 2019

வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக பொதுத்துறை நிறுவனங்கள் நடத்தும் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவாக கோவையில் எல்.ஐ.சி ஊழியர்கள் இன்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக பொதுத்துறை நிறுவனங்கள் இன்று இன்று முதல் 2 நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் தமிழகத்தில் இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பொதுத்துறை நிறுவன தொழிற்சங்கங்கள் பணியை புறக்கணித்து போராட்டம் நடத்தி வருகின்றன.

முன்னதாக கோவை திருச்சி சாலையிலுள்ள எல்ஐசி தலைமை அலுவலகம் முன்பாக நூறுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அனைத்து வங்கிகளும் ஊழியர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. இதனால் பல கோடி ரூபாய் வர்த்தக இழப்பு ஏற்பட்டுள்ளது.இதேபோல் கேரளாவில் பொதுத்துறை நிறுவன தொழிற்சங்க போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருவதால் தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு செல்லும் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. அதில் கேரள எல்லையோர மாவட்டமான கோவையிலிருந்து கேரளாவில் காண பேருந்துகள் அனைத்தும் முற்றிலும் நிறுத்தப்பட்டு உள்ளன.

குறிப்பாக கோவை உக்கடம் பகுதியில் இருந்து கேரளாவிற்கு செல்லும் பேருந்துகள் நிற்கும் நடைமேடை வெறிச்சோடி காணப்படுவதால் கேரளாவிற்கு செல்லும் பயணிகள் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர் .கேரளாவில் நடைபெறும் வழக்கு ஒன்றில் ஆஜராவதற்காக சென்ற பயணி ஒருவர் நீதிமன்றத்தில் ஆஜராக முடியாமல் கோவை உக்கடம் பேருந்து நிலையத்தில் பல மணி நேரமாக காத்து கிடக்கிறார்.

மேலும் படிக்க