• Download mobile app
29 Mar 2024, FridayEdition - 2970
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் உள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு தேர்தல் உபகரணங்கள் அனுப்பும் பணி துவக்கம்

April 5, 2021 தண்டோரா குழு

கோவையில் உள்ள 4 ஆயிரத்து 427 வாக்குச்சாவடி மையங்களுக்கும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் தேர்தல் உபகரணங்கள் அனுப்பும் பணிகள் இன்று துவங்கியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை நடைபெற உள்ளது.கோவை மாவட்டத்தை பொறுத்தவரை 10 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கடந்த 2 வாரங்களுக்கு முன்பே அந்தந்த தொகுதிகளில் உள்ள பாதுகாப்பு அறைகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டன.

மேலும், கணினி முறையில் சுழற்சி அடிப்படையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று பணிகள் துவங்கியுள்ளன. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளுக்கும் சேர்த்து மொத்தம் 4 ஆயிரத்து 427 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த மையங்களுக்கு 5 ஆயிரத்து 316 வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பப்படுகின்றன.இதற்கான பணிகள் இன்று காலை துவங்கியுள்ளது.பாதுகாப்பு அறையிலிருந்து வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் எழுது பொருட்கள், மை,தேர்தலுக்கு தேவையான படிவங்கள் என அனைத்து உபகரணங்களும் இன்று இரவுக்குள் அனுப்பப்படுகின்றன.

மேலும், தேர்தல் பணியில் ஈடுபடும் 21 ஆயிரத்து 500 அரசுப்பணியாளர்களும் இன்று இரவே வாக்குச்சாவடி மையங்களுக்குச் சென்று அங்கேயே தங்கிவிட்டு காலையில் பணியில் ஈடுபட உள்ளனர். காலை 7 மணிக்கு துவங்கும் வாக்குப்பதிவு மாலை 7 மணி வரை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க