• Download mobile app
03 May 2024, FridayEdition - 3005
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் உலக சாதனை முயற்சியாக வேஸ்ட் பேப்பர் மூலம் பிளாஸ்டிக் இல்லா விழிப்புணர்வு ஏற்படுத்திய பள்ளி குழந்தைகள்

January 28, 2019 தண்டோரா குழு

கோவையில் உலக சாதனை முயற்சியாக கோவை தனியார் அரங்கில் பள்ளி குழந்தைகள் வேஸ்ட் பேப்பர் போன்றவைகளை பயன்படுத்தி பிளாஸ்டிக் இல்லா விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர்.

கோவை தனியார் மாலில் உலக சாதனை முயற்சியாக தமிழ்நாடு தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் இல்லா விழிப்புணர்வை பள்ளி குழந்தைகள் செய்து காட்டினர். இதில் 20 அடி நீளம் மற்றும் 10 அடி அங்குலம் கொண்ட வேஸ்ட் பேப்பர் மற்றும் காகித வேஸ்ட் மற்றும் அட்டை பெட்டிகளை பயன்படுத்தி பிளாஸ்டிக் இல்லா விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இந்த உலக சாதனை முயற்சி நிகழ்ச்சியில் குழந்தைகள் 4, வயது முதல்,12 வரை ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.

மேலும் இதில் பிளாஸ்டிக் கடல் மாசுபடுவதை உணர்த்துவதாக ஒ௫ பக்கமும்,மாசு இல்லாத தோற்றத்தை மறுபக்கமும் குழந்தைகளுக்கு எளிதாக புரியும் வகையிலும் இந்த உலக சாதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டது இந்த நிகழ்வில் 100 க்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்று இந்த சாதனை முயற்சி செய்தனர். இந்நிகழ்ச்சியில் சிறப்பு வி௫ந்தினராக சொர்னலதா மற்றும் பிஜித்ரா,அமிர்தா,சுரேஷ்குமார்,ஹரி ,பாலாஜி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் படிக்க