• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த டாக்டர் கைது

March 30, 2019 தண்டோரா குழு

கோவையில் தாயின் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்ற இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மருத்துவர் கைது செய்ய்பட்டுள்ளார்.

கோவை செல்வபுரத்தைச் சேர்ந்த 26 வயது இளம்பெண், தனது தாயின் சிகிச்சைக்காக,அவினாசி ரோடு அண்ணா சிலை சிக்னல் அருகில் கவுதம் கிளினிக் என்ற தனியார் மருத்துவமனைக்கு சென்றார். அப்போது பணியிலிருந்த சிறுநீரக சிகிச்சை நிபுணர் மருத்துவர் ராமலிங்கம் (வயது 65), உடல்நிலை சரியில்லாத தாய்க்கு சிகிச்சை அளிப்பதை விடுத்து மகளின் உடல் பாகங்களை தொட்டு தாய்க்கு இந்த இந்த இடத்தில் தானே வலி உள்ளது என்று கேட்டு பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் பாதிக்கப்பட்ட இளம்பெண், கோவை மத்திய பகுதியிலுள்ள மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து மருத்துவர் ராமலிங்கத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்க