• Download mobile app
19 May 2024, SundayEdition - 3021
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் இருந்து சிறப்பு ரயில் மூலம் சொந்த ஊர் புறப்பட்ட வடமாநில தொழிலாளர்கள்

May 9, 2020 தண்டோரா குழு

கோவையில் இரண்டாம் கட்டமாக சிட்கோ, சுந்தராபுரம் பகுதியில் இருந்த வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பட்டனர்.

கொரோனா ஊரடங்கால் வட மாநிலங்களில் இருந்து கோவையில் தங்கி பணியாற்றி வந்த தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் சிரமப்பட்டு வந்தனர்.இந்நிலையில் நேற்று முதல் கட்டமாக சுமார் 1,149 வட மாநில தொழிலாளர்கள் இரயில் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பட்டனர். இந்நிலையில் சிட்கோ ,ஈச்சனாரி, சுந்தராபுரம் பகுதிகளில் தங்கி பணியாற்றி வரும் வட மாநில தொழிலாளர்கள் நேற்று இரவு சுந்தராபுரம் தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் இன்று காலை அனைவரும் பாதுக்காப்பாக இரயில் நிலையம் அனுப்பட்டனர்.

காலை செல்லும் சிறப்பு இரயில் மூலம் அனைவரும் சொந்த ஊர்களுக்கு செல்ல உள்ளனர். இதனிடையே உத்திரப்பிரதேச மாநிலம் செல்ல உள்ள தொழிலாளர்களுக்கு குறுச்செய்தி வந்துள்ளதை அடுத்து மூன்றாவது இரயில் செல்லும் பயணிகளை ஒருங்கிணைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

மேலும் படிக்க