• Download mobile app
13 Aug 2025, WednesdayEdition - 3472
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் இரயில்வே துறையை கண்டித்து அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம்

December 27, 2021 தண்டோரா குழு

பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றாமல் கோவையை புறக்கணித்து வருவதாக கூறி இரயில்வே துறையை கண்டித்து அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவகம் முன்பு திருச்செந்தூர் ரயிலை கோவையில் இருந்து பொள்ளாச்சி வழியாக இயக்க வேண்டும், பொள்ளாச்சி கிணத்துக்கடவு ரயில் நிலையங்களை சேலம் கோட்டத்துடன் இணைக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்துக் கட்சியினர் கோவை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தியும் கோவை மாவட்டத்தை மத்திய ரயில்வே புறக்கணிப்பதாகவும் கூறி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

இது குறித்து பேட்டியளித்த தந்தை பெரியார் திராவிடர் கழக பொது செலயாளர் கு.இராமகிருட்டிணன்,

பல்வேறு போராட்டங்களுக்கு பின் திண்டுக்கல் அகல ரயில் பாதை அமைக்கப்பட்டும் கோவை வழியாக ரயில்களை இயக்க ரயில்வே துறை மறுத்து கோவையை புறக்கணித்து வருவதாக தெரிவித்தார். மேலும் திருச்செந்தூர் ரயிலை மேட்டுப்பாளையத்தில் இருந்து இயக்க கோரிக்கை வைத்தும் பாலக்காட்டில் இருந்து அந்த ரயில் இயக்கப்பட்டு வருவதாக கூறினார். எனவே இந்த ரயில்வே துறையையும் அதனை ஆளும் மத்திய அரசையும் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக கூறினார்.

மேலும் பொள்ளாச்சி கிணத்துக்கடவு ரயில் நிலையங்களை சேலம் கோட்டத்தில் இணைக்க கோரிக்கை வைப்பதாகவும் தெரிவித்தார்.இந்த ஆர்ப்பாட்டத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம், மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள், தமுமுக உட்பட 20க்கும் மேற்பட்ட கட்சி மற்றும் அமைப்புகளை சேர்ந்த 100க்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க