• Download mobile app
11 Feb 2026, WednesdayEdition - 3654
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் இரண்டாவது வாரமாக ஜவுளி, நகை கடைகள் அடைப்பு வெறிச்சோடியது கடை வீதிகள்

September 11, 2021 தண்டோரா குழு

கோவையில் இரண்டாவது வாரமாக ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள் உள்ளிட்ட கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் கடை வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டது.

கோவை மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த 1-ம் தேதி முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி கோவை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட 8 சாலைகள், திருச்சி சாலையில் சிங்காநல்லூர் சிக்னல் முதல் ஒண்டிப்புதூர் மேம்பாலம் வரை , அவினாசி சாலையில் உள்ள ஆறு சாலைகள், காந்திபுரம் 1 முதல் 11 வரையிலான பகுதிகள் உள்பட பல்வேறு சந்திப்புகள் வீதிகள் ஆகிய பகுதிகளில் இயங்கும் அத்தியாவசியமான மருந்தகம்,பால்,மளிகை கடைகள் காய்கறிகள் தவிர மற்ற கடைகள் அனைத்தும் இரண்டாவது வாரமாக அடைக்கப்பட்டிருந்தது.

இதேபோன்று கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள 32 டாஸ்மாக் மது கடைகள் மூடப்பட்டிருந்தன. மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் உள்ள அனைத்து நகைக்கடைகள், ஜவுளிக்கடைகள் அடைக்கப்பட்டதால் அந்த பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டது.

மேலும் படிக்க