• Download mobile app
17 Jun 2025, TuesdayEdition - 3415
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

கோவையில் இரண்டாவது வாரமாக காவல் துறை நடத்திய பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம்

October 18, 2020 தண்டோரா குழு

கோவையில் இரண்டாவது வாரமாக
மாநகர காவல் துறை சார்பாக நடத்திய பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் பிரச்சினைகளுக்குத் தீர்வு மாநகர பொதுமக்கள் காவல்துறையை வெகுவாக பாராட்டி வருகிறார்கள்.

கோவை மாநகர போலீஸ் சார்பில் பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் தெப்பகுளம் பகுதியில் தனியார் திருமண மண்டபத்தில் போலீஸ் கமிஷனர் சுமித் சரண் உத்தரவின் பேரில் துணை கமிஷனர் ஸ்டாலின் மேற்பார்வையில் மேற்குப்பகுதி உதவி கமிஷனர் திருமேனி முன்னிலையில் நடந்தது. இந்த கூட்டத்தில் 50 பேர் பங்கேற்றனர்.50 பேரிடம் புகார் மனு பெறப்பட்டு உடனடியாக தீர்வு காணப்பட்டது. பெரும்பாலான புகார் மனுக்கள் குடும்ப விவகாரம், கணவர், மனைவி வாக்குவாதம் தகராறு தொடர்பாக பெறப்பட்டது.

ஆர்எஸ் புரம், பெரியகடைவீதி, உக்கடம் , வெரைட்டி ஹால் ரோடு, மேற்குப்பகுதி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பொதுமக்களிடம் புகார் பிரச்சனை தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது.இதில் 50 க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு தங்களது புகார் மனுக்கள் அளித்து வந்தார்கள். மக்கள் காவல் நிலையம் சென்று புகார் அளித்துவந்த காலம்மாறி தற்பொழுது காவலர்களே. மக்களைதேடி சென்று குறைகளை தீர்க்கும் இந்த முடிவு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும் இந்த முகாமில் சம்பந்தப்பட்ட காவல் நிலைய பெரிய கடை வீதி, விவேகாணந்தன், ஆா்,எஸ் புரம், கனகசபாபதி, வெரைடிஹால் ரோடு, மரியமுத்து,உக்கடம்காவல் நிலையம் ராஜவேல், உள்ளிட்ட காவல ஆய்வாளர்கள், மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலையம் மேற்கு ஆய்வாளர் பிரபாதேவி, ஆகியோரும், காவல் நிலைய உதவி ஆய்வாளர்களும் கலந்துகொண்டு மக்களின் குறைகளை கேட்டு அறிந்து வந்தார்கள்.

மேலும் படிக்க