April 22, 2021
தண்டோரா குழு
கோவையில் இன்று 689 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் இன்று தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கோவையில் ஒரே நாளில் 689 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன் மூலம் கோவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 70,262 ஆக உயர்ந்துள்ளது.
மேலும்,கொரோனா தொற்றால் ஒருவர் உயிரிழந்தார்.இதன் மூலம் 710 ஆக அதிகரித்தது.அதே சமயம் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து 460 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.இதன் மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 64,202 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 5,350 பேர் இ.எஸ் ஐ மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.