July 16, 2020 தண்டோரா குழு
கோவையில் இன்று ஒரே நாளில் 256 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பால் மக்களிடையே மிகுந்த அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கோவையில் இன்று 52 பேருக்கு கொரோன தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கோவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1644 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒன்று ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது.
அதே சமயம் இன்று ஒரேநாளில் 256 பேர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 662 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 969 பேர் இ.எஸ் ஐ மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.