• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் இன்று நடைபெற்ற மருத்துவ முகாம்களை நேரில் ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி ஆணையாளர்

July 22, 2020 தண்டோரா குழு

கோவை மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் இன்று நடைபெற்ற மருத்துவ முகாம்களை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கோயம்புத்தூர் மாநகராட்சியில் கொரோனா தடுப்பு பணிகளின் தொடர்ச்சியாக மேற்கு மண்டலம் வார்டு எண்.24-க்குட்பட்ட சுப்பிரமணியம் ரோடு பாலாஜி கல்யாண மண்டபம், வார்டு எண்.22 மேட்டுப்பாளையம் சாலை சுமித் அடுக்குமாடி குடியிருப்பு, வார்டு எண்.9 டிவிஎஸ் நகர் சாலை, காமராஜர் நகர் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளாகம், வார்டு எண்.8 கவுண்டம்பாளையம் இடையர்பாளையம் சாலை சக்தி நகர் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளாகம், வார்டு எண்.7 தடாகம் சாலை இடையர்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி ஆகிய பகுதிகளில் நடைபெற்ற மருத்துவ முகாமினை மாநகராட்சி பறக்கும் படை அதிகாரிகளுடன் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.

பின்னர், தெற்கு மண்டலம் வார்டு எண்.87 வசந்தம் நகர் மற்றும் வார்டு எண்.92 பி.கே.புதூர் இந்திரா நகர் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற மருத்துவ முகாமினை மாநகராட்சி பறக்கும் படை அதிகாரிகளுடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, மருத்துவ முகாம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், தெற்கு மண்டலம் வார்டு எண்.87 குனியமுத்தூர் சின்ன மயானம் பகுதியில் கழிவுநீர் உந்து சக்தி நிலைய கட்டுமானப் பணிகள் நடைபெற்றுவருவதையும், வார்டு எண்.100 முத்து நகர் பகுதியில் பாதாள சாக்கடை கழிவுந நீர் வெளியேற்று நிலையம் அமைக்கும் பணிகள் நடைபெற்றுவருவதையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்குமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

மேலும் படிக்க