February 15, 2019
தண்டோரா குழு
ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலுக்கு உள்ளாகி பலியான ராணுவ வீரர்களுக்கு கோவையில் இந்து மக்கள் கட்சி சார்பில் புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள புல்வாமா மாவட்டத்தின் அவந்திபோரா டவுன் பகுதியில் தற்கொலை படையை சேர்ந்த தீவிரவாதி ஒருவன் 350 கிலோ வெடி மருந்து நிரப்பிய காரை ரிசர்வ் போலீஸ் படையினர் சென்ற கான்வாய் பஸ் மீது மோதச்செய்து குண்டு வெடிப்பை நிகழ்த்தியுள்ளான். இதில், ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த 44 பேர் வீர மரணம் அடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து இன்று பொதுமக்கள் பள்ளி கல்லூரிகள் மற்றும் அனைத்து கட்சியினர் என இதய அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் கோவையில் செஞ்சிலுவைச்சங்கம் அருகே இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் இறந்த ராணுவ வீரர்களுக்கு மோட்ச தீப வழிபாடு நடத்தப்பட்டது. அத்துடன் பயங்கரவாத அமைப்புகளை தடை செய்ய வேண்டும் எனவும் தேசத்தின் ஒற்றுமையை காப்பாற்ற வேண்டும் எனவும் இந்த வழிபாடு நிகழ்ச்சியில் முழக்கங்களை எழுப்பினர்.