• Download mobile app
19 May 2024, SundayEdition - 3021
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் இதுவரை 12 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை !

May 11, 2021 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் இதுவரை 12 லட்சத்து 26 ஆயிரத்து 217 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மாவட்டம் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தால் பல்வேறு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இதனிடையே கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே போகுகிறது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள்,விமான நிலையம் மற்றும் பொது இடங்கள் என அப்பகுதிகளில் கொரோனா பரிசோதனைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது.அதன் அடிப்படையில் கோவை மாவட்டத்தில் இதுவரை 12 லட்சத்து 26 ஆயிரத்து 217 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப் பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் கூறுகையில்,

‘‘கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் இதுவரை 12,26,217 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்து உள்ளோம். மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது,’’ என்றார்.

மேலும் படிக்க