• Download mobile app
14 May 2025, WednesdayEdition - 3381
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் இதுவரை விதிமுறைகளை மீறியவர்களுக்கு ரூ.2.58 கோடி அபராதம்

June 18, 2021 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டு உள்ளன. மேலும் சமூக இடைவெளியை கடைபிடிக்காத நிறுவனங்கள், கடைகளின் உரிமையாளர்கள், முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இதன்படி இதுவரை ரூ.2 கோடியே 58 லட்சம் அபராதமாக விதி க்கப்பட்டு வசூலிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் கூறியதாவது:

கோவை மாவட்டத்தில் சமூக இடைவெளியை பின்பற்றாத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.கடை உரிமையளார்கள், பணிபுரியும் ஊழியர்கள் என அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். இல்லையென்றால் அபராதம் விதிக்கப்படுகிறது. மாவட்டம் முழுவதும் நேற்று மட்டும் ஒரேநாளில் ரூ.2 லட்சத்து 66 ஆயிரம் அபராதமாக விதிக்கப்பட்டு உள்ளது. இதுவரை ரூ.2 கோடியே 58 லட்சம் அபராதமாக விதி க்கப்பட்டு உள்ளது. இதில் மாநகராட்சி பகுதியில் மட்டும் ரூ.1 கோடியே 37 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க