• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் இதுவரை விதிமுறைகளை மீறியவர்களுக்கு ரூ.2.58 கோடி அபராதம்

June 18, 2021 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டு உள்ளன. மேலும் சமூக இடைவெளியை கடைபிடிக்காத நிறுவனங்கள், கடைகளின் உரிமையாளர்கள், முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இதன்படி இதுவரை ரூ.2 கோடியே 58 லட்சம் அபராதமாக விதி க்கப்பட்டு வசூலிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் கூறியதாவது:

கோவை மாவட்டத்தில் சமூக இடைவெளியை பின்பற்றாத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.கடை உரிமையளார்கள், பணிபுரியும் ஊழியர்கள் என அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். இல்லையென்றால் அபராதம் விதிக்கப்படுகிறது. மாவட்டம் முழுவதும் நேற்று மட்டும் ஒரேநாளில் ரூ.2 லட்சத்து 66 ஆயிரம் அபராதமாக விதிக்கப்பட்டு உள்ளது. இதுவரை ரூ.2 கோடியே 58 லட்சம் அபராதமாக விதி க்கப்பட்டு உள்ளது. இதில் மாநகராட்சி பகுதியில் மட்டும் ரூ.1 கோடியே 37 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க