• Download mobile app
23 Mar 2026, MondayEdition - 3694
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் இடம் வாங்கி தருவதாக கூறி பணம் மோசடி -மாவட்ட ஆட்சியரிடம் புகார்

November 20, 2017 தண்டோரா குழு

கோவையில் இடம் வாங்கி தருவதாக கூறி பணம் மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெண் ஒருவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார்.

கோவை மாவட்டம்,உக்கடத்தை அடுத்த, GM நகரை சேர்ந்தவர் லக்ஷ்மி.இந்நிலையில் இவர் அழகர் என்பவர் இடம் வாங்கி தருவதாக கூறி பணம் மோசடி செய்ததாக கூறி அவர் மீது நடவடிக்கை எடுக்ககோரி மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார்.

இது குறித்து லட்சுமி கூறும்போது,

நான் கடந்த பதினைந்து ஆண்டுகளாக மகளிர் குழு நடத்தி வருகிறேன். கடந்த 2011-ஆம் ஆண்டு கௌரி என்பவர் மூலம் அழகர்சாமி என்பவர் புளியம்பட்டியில் மாதத்தவனைக்கு இடம் விற்பதாகவும், 2 ¾ சென்ட் 79,000-த்திற்கு வாங்கித்தருவதாகவும் கூறி அலுவலகம் மற்றும் அந்த இடத்திற்கும் அழைத்து சென்றார்.இதில் பலரும் பயனடைய வேண்டும் என பல பேரை இதில் சேர்த்தினேன்.

இந்நிலையில் அனைவரும் பணம் செலுத்தி மாதத்தவணை முடிந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 2016-ஆம்ஆண்டு பத்து நாட்களுக்குள் கிரையம் செய்து தருவதாக கூறிய அழகர்சாமி நபர் ஒன்றுக்கு ரூ24000 பெற்று கொண்டு சென்றார். ஆனால் இதுவரையில் எங்களுக்கு இடம் பதிவுசெய்து தரவில்லை.

மேலும்,இதுகுறித்து அழகர்சமியிடம் கேட்ட போது அவர் எங்களை மிரட்டுகிறார்.இது சம்பந்தமாக காவல் துறையினரிடம் பல முறை மனு கொடுத்தும் எந்த பலனும் இல்லை.இதற்கிடையில் நான் குழுவில் சேர்த்தி விட்ட பெண்கள் என்னை தொந்தரவு செய்கின்றனர். எனவே இது சம்பந்தமான மோசடி நபர்களை விசாரித்து மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறினார்.

மேலும் படிக்க