• Download mobile app
28 Mar 2026, SaturdayEdition - 3699
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் ஆட்டோ ஓட்டுனர்களிடம் குறைகளை கேட்டறிந்த கமல்ஹாசன்

April 3, 2021 தண்டோரா குழு

கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், தன் தொகுதிக்குட்பட்ட ரயில் நிலையம் பகுதியில் ஆட்டோ ஓட்டுனர்களிடம் அவர்களது குறைகளை கேட்டறிந்து வாக்கு சேகரித்தார்.

சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கோவையில் முகாமிட்டு, தன் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வீதி வீதியாகச் சென்று தீவிர தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்.

அந்த வகையில் இன்று கோவை ரயில் நிலையம் பகுதி வந்த கமல்ஹாசன், ரயில் நிலையத்தை பார்வையிட்டார். பின்னர் அங்குள்ள ஆட்டோ ஸ்டாண்டில் இருந்த ஆட்டோ ஓட்டுநர்களிடம் கலந்துரையாடி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர்களது குறைகளை கேட்டறிந்த கமல்ஹாசன், தான் வெற்றி பெற்றவுடன் குறைகளை தீர்க்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

மேலும் படிக்க