• Download mobile app
20 May 2025, TuesdayEdition - 3387
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் அரசு அதிகாரி எனக்கூறி ரூ.30 ஆயிரம் பணம் திருடிச்சென்றவர் கைது

October 17, 2020 தண்டோரா குழு

கோவையில் அரசு அதிகாரி எனக்கூறி அழகு நிலைய உரிமையாரை மிரட்டி ரூ.30 ஆயிரம் பணம் திருடிச் சென்றவரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவை சொக்கப்புதூரை சேர்ந்தவர்
மதன் கண்ணன்.வாடகை வீட்டில் கடந்த 5 வருடமாக வசித்து வருகிறார்.இவர் தனது நண்பர் ஸ்ரீகாந்த் என்பவருடன் சொந்தமாக டீக்கடைகளுக்கு பயன்படும் டீ பில்டர் கிளாத் சொந்தமாக தயாரித்து சப்ளை செய்து வருகிறார்கள்.தற்சமயம் இந்த தொழில் தொய்வாக இருப்பதால் கோவை பீளமேடு அண்ணாநகர் அருகேயுள்ள ராம்லட்சுமணன் நகரில் நலம் பியூட்டி கேர் என்ற பெயரில் பியூட்டி பார்லர் தொழில் செய்வதற்கு உண்டான வேலைகளை கடந்த 1 மாதமாக செய்து வருகின்றனர்.

மேலும் தொழிலுக்குண்டான உபகரணங்கள் தளவாடங்கள் ஆகியவற்றை வாங்கி வைத்துள்ளனர்.மேலும் கடை அமைப்பதற்கு பதிவு செய்ததற்கான ரசீது பெற்று, கோவை மாநகராட்சியிலும் கோவை தீயணைப்புத்துறையிலும் உரிய விண்ணப்பம் கொடுத்துள்ளனர்.இதனிடையே கடந்த கடந்த மாதம் 22 தேதியன்று தங்கள் நிறுவனத்தில் பணிபுரிய தகுதி பெற்ற பெண்களை வேலைக்கு அமர்த்த வேண்டி நேர்காணல் நடத்திக் கொண்டு இருந்த சமயத்தில் மதியம் 1.30 மணியளவில் அழகு நிலையம் சம்பந்தமான துறை அதிகாரி எனக்கூறி வேலுமணி என்பவர் அங்கு வந்துள்ளார். மேலும் விண்ணப்பங்கள் கொடுத்திருந்த பேப்பர்களையும், கைவசம் இருந்த 30,000/- மிரட்டி பறித்துச் சென்றுள்ளார்.

மேலும் செல்போனில் தொடர்பு கொண்டு அடிக்கடி பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இதனிடையே நேற்று அழகு நிலையத்தில் இருந்த போது வேலுமணி நேரில் வந்து மீண்டும் 30 ஆயிரம் கேட்டு மிரட்டியுள்ளார். அங்கிருந்தவர்கள் கூடியதால் வேலுமணி தப்பி ஓடியுள்ளார். இதையடுத்து மதன் கண்ணன் பீளமேடு போலீஸில் அளித்த புகார் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீஸார் வேலுமணியை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் படிக்க