• Download mobile app
07 Jun 2026, SundayEdition - 3770
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் அதிமுகவின் 49 வது ஆண்டுவிழா கொண்டாட்டம்

October 17, 2020 தண்டோரா குழு

அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் 49 வது ஆண்டுவிழா நாடுமுழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

கோவையில் மாநகர் மாவட்ட செயலாளரும், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான அம்மன் கே அர்ஜுனன் தலைமையில் கட்சியின் தலைமை அலுவலகமான இதய தெய்வம் மாளிகையில் கட்சி தொண்டர்கள் சிறப்பாக கொண்டாடி வருகிறார்கள். அதன் ஒருபகுதியாக கட்சி தலைமை அலுவலகமான இதய தெய்வம் மாளிகையில் இருந்து மேளதாளங்களுடன் ஊர்வலமாக சென்று கோவை அவினாசி சாலையில் உள்ள அறிஞர் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரது சிலைகளுக்கு மாலையிட்டு மரியாதை செய்யப்பட்டது.

அதனைதொடர்ந்து. கட்சி அலுவலகத்தில் கட்சியின் கொடியையேற்றி, அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தலைவர்கள் பேரறிஞர் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரது திருவுருவ படத்திற்கு மாலையிட்டு மரியாதை செய்யப்பட்டது. பின்னர் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தார்கள். இந்த விழாவில் கட்சியின் கோவை மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.

மேலும் படிக்க