• Download mobile app
19 Sep 2025, FridayEdition - 3509
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் அடுத்தது கோவில்களை சேதப்படுத்தியவரை அடையாளம் கண்டது போலீஸ்

July 19, 2020 தண்டோரா குழு

கோவையில் அடுத்தது கோவில்களை
சேதப்படுத்தியரை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.

கோவையில் நேற்று மர்ம நபர்
என்.எச். சாலையில் உள்ள மாகாளியம்மன் கோவில்,ரயில் நிலையம் முன்பாக உள்ள விநாயகர் கோவில், கோட்டை மேடு பகுதியில் உள்ள விநாயகர் கோவில், கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள விநாயகர் கோவில் ஆகிய நான்கு கோவில் முன்பாக உள்ள பழைய டயர்களை தீ வைத்தும், கோவில் முன்பாக உள்ள பொருட்களை சேதப்படுத்தியும் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து, சிசிடிவி காட்சிகள் வைத்து தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.அப்போது கோவையில் அடுத்தடுத்து கோவில்கள் சேதப்படுத்தப்பட்ட விவகாரத்தில் ஈடுபட்டது சேலத்தை சேர்ந்த கஜேந்திரன் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கஜேந்திரனின் புகைபடத்தை கொண்டு தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க