• Download mobile app
11 Feb 2026, WednesdayEdition - 3654
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் அடிப்படை வசதிகளை செய்து தர கோரி பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

November 18, 2021 தண்டோரா குழு

கோவையில் பொதுமக்களின் அடிப்படை வசதிகளை செய்து தர கோரி பாஜகவினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பா.ஜ.க கோவை மாநகர் மாவட்டம் வேலாண்டிபாளையம் மண்டல் 21 வது வார்டு சார்பில் நூற்றாண்டு பழமை வாய்ந்த ஸ்ரீ அங்காளம்மன் கோவில் இடிக்கப்பட்டதை கண்டித்தும், பொதுமக்களின் அடிப்படை பிரச்சனைகளை சரி செய்துதர கோரியும் கோவை 21 வது வார்டு பூசாரிபாளையம் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பா.ஜ.க கோவை மாவட்ட பட்டியல் அணி தலைவர் ஜெ.சி.விவேக் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு மாநகராட்சியை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

தொடர்ந்து பேசிய பா.ஜ.க பட்டியல் அணி தலைவர் ஜெ.சி.விவேக்,

மக்களின் அடிப்படை வசதிகளையும், இடிக்கப்பட்ட கோவில்களை திரும்பி கட்டி தரவில்லையென்றால் பாஜக சார்பில் தொடர் போராட்டங்களை நடத்துவோம் என தெரிவித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துனைத்தலைவர் கோவிந்தராஜ்,வேலாண்டிபாளையம் மண்டல் தலைவர் கார்த்தி,செயலாளர் முனியப்பன், மாவட்ட பட்டியல் அணி நிர்வாகிகள் முத்துகுமார், தவமணி, கரிகாலன்,அரவிந்த் சுரேஷ், மோகன்ராஜ்,பன்னீர் மற்றும் 21 வார்டை சேர்ந்த பா.ஜ.க நிர்வாகிகள் 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

மேலும் படிக்க