• Download mobile app
24 May 2025, SaturdayEdition - 3391
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையின் முக்கிய பகுதிகளில் மறைமுகமாக இயங்கும் ஜவுளி கடைகள்

May 11, 2020 தண்டோரா குழு

ஊரடங்கு உத்தரவை மீறி கோவையின் முக்கிய பகுதிகளில் மறைமுகமாக ஜவுளி கடைகள் இயங்கி வருகிறது.

கொரோனா பாதிப்பால், நாடு முழுவதும் ஊரடங்கு வரும் மே,17 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில்,ஊரடங்கில், சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, அத்தியாவசிய பொருட்கள் விற்பனை கடைகள் மட்டும் திறக்க,தமிழக அரசு உத்தரவிட்டது. மக்கள் அதிகம் கூடுவதை தடுக்க மத்திய,மாநில அரசுகள் அறிவுறுத்தி வரும் நிலையில் கோவையின் முக்கிய நகரங்களில் உள்ள பிரபலமான ஜவுளி கடைகளின் பின்புறம் மற்றும் அருகில் உள்ள சிறிய வாசல் வழியாக வியாபாரம் நடைபெறுவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோவையில் ஜவுளி கடைகள் அதிகம் உள்ள முக்கிய பகுதிகளான ஒப்பணக்கார வீதி, காந்திபுரம், கிராஸ்கட் சாலை மற்றும் பீளமேடு மசக்காளி பாளையத்தில் உள்ள சில்க்ஸ் சாரி விற்பனையகம் போன்ற கடைகளில் வாடிக்கையாளர்களை உள்ளே அமர வைத்து வியாபாரம் நடைபெற்று வருகிறது. கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில்,மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு, சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில் அதனை சாதகமாக்கி இது போன்ற பெரிய ஜவுளிகடைகளில் சமூக விலகலை காற்றில் பறக்கவிட்டு மறைமுகமாக நடைபெறும் விற்பனையால் பச்சையை நோக்கி செல்லும் கோவை மாவட்டம் சிவப்பு நிறத்திற்கு செல்லும் அபாயம் உள்ளது என்பதை மாவட்ட நிர்வாகம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மேலும் படிக்க