• Download mobile app
24 Jul 2025, ThursdayEdition - 3452
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவைமாவட்டத்தில் 137 வழக்குகள் : 1580 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

April 26, 2023 தண்டோரா குழு

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், பொள்ளாச்சி காவல் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் பிருந்தா தலைமையில் பொள்ளாச்சி பகுதியில் போதைப் பொருள்கள் விற்பனை செய்பவர்கள் மற்றும் பதுக்கி வைத்திருப்பவர்கள் விபரங்கள் சேகரிக்கப்பட்டு அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட, புகையிலைப் பொருட்களை பதுக்கி வைத்திருந்த ஜியாண்ட்ரா குமார்(31) கைது செய்யப்பட்டு, அவரிடமிருந்து ரூ.1.75 லட்சம் மதிப்புள்ள 211.800 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதனிடையே கோவை மாவட்டத்தில் கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் தற்போது வரை காவல்துறையினரால் நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட 147 நபர்கள் மீது 137 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவர்களிடமிருந்து சுமார் 1580.120 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க