• Download mobile app
09 Sep 2025, TuesdayEdition - 3499
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவைமாவட்டத்தில் 137 வழக்குகள் : 1580 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

April 26, 2023 தண்டோரா குழு

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், பொள்ளாச்சி காவல் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் பிருந்தா தலைமையில் பொள்ளாச்சி பகுதியில் போதைப் பொருள்கள் விற்பனை செய்பவர்கள் மற்றும் பதுக்கி வைத்திருப்பவர்கள் விபரங்கள் சேகரிக்கப்பட்டு அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட, புகையிலைப் பொருட்களை பதுக்கி வைத்திருந்த ஜியாண்ட்ரா குமார்(31) கைது செய்யப்பட்டு, அவரிடமிருந்து ரூ.1.75 லட்சம் மதிப்புள்ள 211.800 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதனிடையே கோவை மாவட்டத்தில் கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் தற்போது வரை காவல்துறையினரால் நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட 147 நபர்கள் மீது 137 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவர்களிடமிருந்து சுமார் 1580.120 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க