• Download mobile app
13 Jun 2025, FridayEdition - 3411
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவைக்கு வாக்காளர் வாக்குபதிவுகளை சரிபார்க்கும் 300 இயந்திரங்கள் கூடுதலாக வரவழைப்பு

March 1, 2019 தண்டோரா குழு

மக்களவை தேர்தலையொட்டி கோவையில் 3728 வாக்காளர் வாக்குபதிவுகளை சரிபார்க்கும் இயந்திரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ள நிலையில், கூடுதலாக 300 இயந்திரங்கள் பெங்களூரில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளது.

மக்களவை தேர்தலுக்கு பயன்படுத்தும் 7263 வாக்குபதிவு இயந்திரங்கள், 3950 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் மற்றும் 3728 வாக்காளர் வாக்குபதிவினை சரி பார்க்கும் இயந்திரங்கள் பெங்களுரில் இருந்து கோவை மாட்ட சுகாதார துறை, துணை இயக்குநர் அலுவலத்தில் இருப்பு அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கூடுதல் தேவைக்காக 300 வாக்காளர் வாக்குபதிவுகளை சரிபார்க்கும் இயந்திரங்களும் பெங்களூர் பெல் நிறுவனத்திடம் இருந்து இன்று கொண்டு வரப்பட்டது.

மாவட்ட ஆட்சியர் ராசாமாணி முன்னிலையில் வாகனத்தில் இருந்து இறக்கப்பட்ட இயந்திரங்கள் இருப்பு அறைபில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. ஏற்கனவே வைக்கப்பட்டுள்ள இயந்திரங்கள் சரி பார்க்கப்பட்டுள்ளதாகவும், தற்போது கொண்டு வரப்பட்டுள்ள இயந்திரங்கள் அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சிகள் முன்னிலையில் சரிபார்க்கப்படும் என தெரிவித்தார்.

மேலும் 2018 டிசம்பர் மாதத்திற்குள் 18 வயது பூர்த்தியானவர்கள், இது வரை வாக்காளர் பட்டியலில் சேராதவர்கள் கோவையில் உள்ளதாக தெரியவந்ததை அடுத்து அவர்களை வாக்களர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுத்து வருபதாகவும் கூறினார்.

மேலும் படிக்க