• Download mobile app
06 Jun 2026, SaturdayEdition - 3769
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவைக்கு நபார்டு வங்கி மூலம் ரூ.22 ஆயிரம் கோடி வளன் சார் கடன் இலக்கு நிர்ணயம்

December 23, 2020 தண்டோரா குழு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், நபார்டு வங்கயின் 2021-2022 ம் நிதி ஆண்டுக்கான வளன் சார் கடன் திட்ட அறிக்கையினை மாவட்ட ஆட்சியர் ராஜாமணி வெளியிட்டார்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் ராஜாமணி தெரிவித்ததாவது:

கோவை மாவட்டத்தில் விவசாயம் மட்டுமின்றி சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களும் சிறந்த முறையில் நடைபெற்று வருகிறது. வங்கிகளின் சேவை இத்துறைகளின் வளர்ச்சிக்கு இன்றியமையாதது. 2021-2022 ஆம் நிதி ஆண்டுக்கான வளன் சார் கடன் திட்டத்தினை செயலாக்குவதில் வங்கிகள் முழு முனைப்புடன் செயல்படவேண்டும். வேளாண் தொழில்களுக்கு ரூ.8038.07 கோடி (35 சதவீதம்), சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு ரூ.9982.13 கோடி (43 சதவீதம்), இதர தொழில்களுக்கு ரூ.4945.26 கோடி (22 சதவீதம்) என மொத்த ரூ.22965.47 கோடியில் 2021-2022 ஆம் ஆண்டிற்கு வளன் சார் கடன் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

நிகழ் ஆண்டை காட்டிலும் வரும் ஆண்டிற்கான நிதி ஆற்றல் 11.72 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.இதுபோன்ற கடன்வசதிகள் விவசாயிகளின் வருமானத்தை பெருக்க உதவிடும்.

இவ்வாறு ஆட்சியர் ராஜாமணி தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷன், நபார்டு வங்கியின் மாவட்ட வளர்ச்சி மேலாளர் திருமலாராவ், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் மோகன், வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், இணை இயக்குநர்(வேளாண்மை) சித்ராதேவி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க