• Download mobile app
20 Apr 2024, SaturdayEdition - 2992
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவைக்கு தேர்தல் பணிக்கு வந்த துணை ராணுவப்படையினர் ஊர் திரும்பினர்

April 8, 2021 தண்டோரா குழு

கோவை மாவட்டத்திற்கு தேர்தல் பணிக்காக வந்த துணை ராணுவப்படையினர் ரயில் மூலம் சொந்த ஊர் புறப்பட்டனர்.

கோவை மாவட்டத்தில் சட்டமன்றத் தேர்தலை ஒட்டி பல்வேறு வட மாநிலங்களில் இருந்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துணை ராணுவப்படை வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். இவர்கள் 891 பதட்டமான வாக்குச்சாவடிகள் உட்பட பல்வேறு ஓட்டுச்சாவடிகளில் பணியாற்றினர்.

ஓட்டுப்பதிவு முடிந்த நிலையில் இவர்கள் நேற்று இரவு ரயில் மூலம் சொந்த ஊர் சென்றனர். துணை ராணுவத்தினர் ஓட்டுப்பதிவு பெட்டிகளை வாகனங்களில் ஏற்றி எண்ணிக்கை மையம் கொண்டு செலுத்துதல் பதட்ட பகுதியில் கூட்டம் கட்டுப்படுத்துதல் போன்ற பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

போலீசார் பற்றாக்குறை இருந்த நிலையில் துணை ராணுவத்தினர் வருகையால் கோவையில் பதட்டம் சூழல் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க