• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவிஷீல்டு தடுப்பூசியின் விலையை இருமடங்கு அதிகரித்து சீரம் நிறுவனம் !

April 21, 2021 தண்டோரா குழு

கோவிஷீல்டு தடுப்பூசியின் விலையை இருமடங்கு அதிகரித்து சீரம் நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனாவுக்கு எதிராக 2 தடுப்பூசிகள் இந்தியாவில் செலுத்தப்பட்டு வருகின்றன. இதில் ஏற்கெனவே கோவிஷீல்டு தடுப்பூசி ரூ.250க்கு விற்பனை செய்யப்பட்டது.
இதற்கிடையில்,அமெரிக்காவில் ரூ.1,500க்கும், ரஷ்யா மற்றும் சீனாவில் ரூ.750க்கும் கொரோனா தடுப்பூசி விற்பனை செய்யப்படுகிறது.அதன் விலையை ஒப்பிட்டு சீரம் நிறுவனம் தற்போது விலையை கூட்டியுள்ளது.

அதன்படி,கோவிஷீல்டு தடுப்பூசியின் விலை தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.600க்கும், மாநில அரசுகளுக்கு ரூ.400 எனவும் சீரம் நிறுவனம் அறிவித்துள்ளது.ஏற்கெனவே இரண்டு தடுப்பூசி நிறுவனங்களுக்கும் மத்திய நிதி தொகுப்பில் இருந்து மத்திய அரசு நிதி வழங்கியுள்ளது. உற்பத்தி செலவு அதிகமாக இருப்பதால் மத்திய அரசு நிதி வழங்க வேண்டும் என வலியுறுத்தியதின் பேரில் மத்திய அரசு நிதி வழங்கியது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க