• Download mobile app
26 Mar 2026, ThursdayEdition - 3697
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவிலுக்கு பூஜை செய்ய சென்ற மூதாட்டி, காட்டு யானை தாக்கி உயிரிழப்பு

September 15, 2020 தண்டோரா குழு

கோவை அருகே கோவிலுக்கு பூஜை செய்ய சென்ற மூதாட்டி காட்டு யானை தாக்கி உயிரிழந்தார்.

கோவை மாவட்டம் பன்னிமடை அருகேயுள்ள பாப்பநாய்க்கன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் லீலாவதி. 73 வயதான இவர் அதேபகுதியில் அழகர் கோவிலுக்கு அடிக்கடி சென்று பூஜை செய்வது வழக்கம்.அதன்படி இன்று அதிகாலை 5 மணியளவில் கோவிலுக்கு பூஜை செய்ய சென்றுள்ளார்.அப்போது எதிரே வந்த ஒற்றை ஆண் காட்டு யானை தாக்கியதில், நிகழ்விடத்திலேயே லீலாவதி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனைப்பார்த்த அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். கோவை வனத்துறையினர் உடலைக் கைப்பற்றி ஊடற்கூராய்விற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே காட்டு யானைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி, அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

மேலும் படிக்க