• Download mobile app
15 Apr 2026, WednesdayEdition - 3717
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோழிக்கோட்டில் தீ விபத்து சேதம் எதுவும் இல்லை

February 22, 2017 தண்டோரா குழு

கேரள மாவட்டத்தின் கோழிக்கோட்டில் உள்ள எஸ்எம் தெருவில் தீ விபத்து புதன்கிழமை (பிப்ரவரி 22) காலையில் ஏற்பட்டது.

கேரளத்தின் எஸ்எம் தெரு ஒரு பெரிய வணிக இடமாகும். அவ்விடத்தை ‘மிட்டாய்த் தெருவு’ என்று அழைக்கப்படுவதும் உண்டு.

அங்குள்ள ஒரு ஜவுளிக் கடையில் காலை 11.30 மணியளவில் தீ பிடித்துள்ளது. அந்தத் தீ வேகமாகப் பரவியதால் அப்பகுதியில் இருந்த 15 கடைகள் நாசமாயின.

தகவல் அறிந்த 1௦ தீயனைப்பு வண்டிகளில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தீயை அணைத்து, அதன் சுற்றியுள்ள உணவகங்களுக்குப் பரவாமல் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த விபத்தில் ஏற்பட்ட சேதம் குறித்து தகவல் தெரியவில்லை. இந்த சம்பவத்திற்கான காரணமும் சரியாக கண்டுப்பிடிக்க முடியவில்லை. இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க