• Download mobile app
19 May 2024, SundayEdition - 3021
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோடநாடு விவகாரத்தில் முதல்வரை தொடர்புபடுத்தி பேச மேத்யூ சாமுவேலுக்கு தடை விதித்தது உயர்நீதிமன்றம் !

January 23, 2019 தண்டோரா குழு

கோடநாடு விவகாரத்தில் முதலமைச்சருக்கு எதிராக பேசவோ, ஆதாரங்களையோ வெளியிட மேத்யூ சாமுவேலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலளிதாவிற்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை மற்றும் கொள்ளையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும் தொடர்பு இருப்பதாக தெஹல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் ஆவணப்படம் வெளியிட்டது புயலைக் கிளப்பியுள்ளது. இதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மறுப்பு தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

இந்நிலையில், பத்திரிகையாளர் மேத்யூவுக்கு எதிராக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் ரூ. 1.10 கோடி நஷ்ட ஈடுகேட்டு வழக்கு
தொடர்ந்துள்ளார். அதில், தன்னை பற்றி மேத்யூ, சயன், மனோஜ் பேசுவதற்கு தடை விதிக்க மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, முதல்வர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை அவசர வழக்காக நீதிபதி கல்யாண சுந்தரம் தற்போது விசாரித்தார். அப்போது, கோடநாடு விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பற்றி பேசுவதற்கு மேத்யூஸ், சயான், மனோஜ் உள்ளிட்ட 7 பேருக்கு தடை நீதிபதி தடைவிதித்தார். இதுமட்டுமின்றி, ஆதாரங்கள் இல்லாமல் ஆவணங்களை வெளியிடவும் தடை விதித்தார். மேலும், முதல்வர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு 7 பேரும் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நீதிபதி கல்யாண சுந்தரம் ஜனவரி 30 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

மேலும் படிக்க