• Download mobile app
05 May 2024, SundayEdition - 3007
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கொலை மிரட்டல் வருவதாக உயர்நீதிமன்றத்தில் சகாயம் புகார்

August 8, 2017 தண்டோரா குழு

ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தனக்கு கொலை மிரட்டல் வருவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளார்.

தமிழகத்தில் கிரானைட் முறைகேடு தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தலைமையிலான குழு சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தது.இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் சகாயம் இன்று ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், கிரானைட் முறைகேடு குறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளித்ததால் தனக்கு கொலை மிரட்டல் வருவதாக புகார் மனு அளித்துள்ளார்.

மேலும் இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் விசாரணையை 14ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. விசாரணை குழு ஆவணங்களை ஒப்படைக்க, ஒரு மாத காலம் அவகாசம் வழங்கியும் உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க