• Download mobile app
23 May 2025, FridayEdition - 3390
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கொரோனா பரவல் எதிரொலி- கோவை எம்.ஜி.ஆர் மார்க்கெட்டிற்கு சீல்

June 26, 2020 தண்டோரா குழு

கோவை எம்.ஜி.ஆர் மார்க்கெட்டை சேர்ந்த 3 வியாபாரிகளுக்கும், அண்ணா மார்க்கெட்டை சேர்ந்த ஒருவருக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் எம்.ஜி.ஆர் மார்க்கெட் மூடப்படும் என கோவை மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவன்குமார் ஜடாவத் தெரிவித்துள்ளார். இதையடுத்து,
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் எம்.ஜி.ஆர் மார்க்கெட்டிற்கு மாநகராட்சி அதிகாரிகள் அதிரடியாக சீல் வைத்தனர்.

மேலும்,மார்க்கெட்டிற்கு அருகே உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா என்ற தனியார் வாகன நிறுத்துமிடத்திற்கும் அதிகாரிகள் சீல் வைத்தனர்.காய்கறிகளை எடுத்து செல்வதற்காக வியாபாரிகளுக்கு நாளை மதியம் 12 மணி வரை கெடு அளிக்கப்பட்டுள்ளது.வியாபாரிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்படும் எனவும், அதில் கொரோனா நெகட்டிவ் வரும் வியாபாரிகளுக்கு வியாபாரம் நடத்த மாற்று இடம் வழங்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், எருக்கம்பெனி மற்றும் ஜி.சி.டி கல்லூரி வளாகத்தில் தற்காலிக மார்க்கெட் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு மேற்கொண்டார்.அங்கு வியாபாரிகளுக்குக் கடைகள் வழங்குவது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

மேலும் படிக்க