• Download mobile app
15 May 2025, ThursdayEdition - 3382
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கொரோனா பரவலை தடுக்க முதலில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் – டாக்டர் கிருஷ்ணசாமி

April 15, 2021 தண்டோரா குழு

கொரோனா பரவலை தடுக்க முதலில் டாஸ்மாக்,கடைகளை உடனடியாக மூட வேண்டும்,என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கோவையில் தெரிவித்துள்ளார்.

கோவையில் புதிய தமிழகம் கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது பேசிய அவர்,

கொரோனோ பெருந்தொற்று வேகமாக பரவுவது மிகவும் வேதனையளிக்கிறது. வணிக நிறுவனங்கள்,தொழிற்கூடங்கள் முழு ஊரடங்கை தாங்க முடியாது,எனவே அப்படி ஒரு எண்ணமே வரக்கூடாது.மத்திய, மாநில அரசுகள் துரிதமாக செயல் பட வேண்டும் எனவும்,கொரோனோ அறிகுறிகள் தென்பட்டாலே உடனே சிகிச்சை தொடங்க வேண்டும் கூறிய அவர்,முதலில் டாஸ்மாக்,கடைகளை உடனடியாக மூட வேண்டும் எனவும்,அரசு இதில் அலட்சியம் காண்பிக்காமல் செயல்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து அவர்,முகக்கவசம் அணியவில்லை என்றால் முகக்கவசம் கொடுக்க வேண்டும், அபராதம் விதிக்க கூடாது.மாநில, மாவட்ட அளவில் அரசியல் கட்சி தலைவர்களை வைத்து குழு அமைத்து கொரோனோ கட்டுப்படுத்த வேண்டும் என அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க