• Download mobile app
09 May 2026, SaturdayEdition - 3741
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கொரோனா தடுப்பு நடவடிக்கையின் பங்களிப்பாக கோவை பிரஸ் கிளப் நிதி

April 10, 2020 தண்டோரா குழு

கோயமுத்தூர் பத்திரிக்கையாளர் மன்றம் (CPC) சார்பில் கொரோனா தடுப்பு நடவடிக்கையின் பங்களிப்பாக முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ 20,000 ரூபாய்கான காசோலையை மன்ற நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு தொழில் துறையினர், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் தமிழக முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு தங்களது பங்களிப்பை அளித்து வருகின்றனர். இதன்ஒருபகுதியாக கோயமுத்தூர் பத்திரிக்கையாளர் மன்றம் (CPC) மற்றும் உறுப்பினர்களின் பங்களிப்போடு இருபதாயிரம் ரூபாய்கான காசோலையை முதல் கட்டமாக மன்ற தலைவர் பாபு,செயலாளர் தங்கராஜ், பொருளாளர் விஜய் ஆகியோர் கொரோனா தடுப்பு நடவடிக்கைகாக முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணியிடம் வழங்கினர்.இந்த நிகழ்வின் போது மன்ற உறுப்பினராகள், கோவை மாவட்ட மக்கள் தகவல் தொடர்புத்துறை அதிகாரி நல்லதம்பி ஆகியோர் உடனிருந்தார்.
மேலும் பிரஸ் கிளப் உறுப்பினர்கள் அளிக்கும் நிதியை அடுத்த கட்டமாக வரும் புதன்கிழமை வழங்க உள்ளனர்.

மேலும் படிக்க