• Download mobile app
19 Sep 2025, FridayEdition - 3509
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கொரோனா சிகிச்சைக்கு பின் மீண்டும் பணிக்கு திரும்பிய கோவை மாவட்ட ஆட்சியர்

August 10, 2020 தண்டோரா குழு

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி சிகிச்சைக்கு பின் பூரண குணமடைந்து பணிக்கு திரும்பினார்.

கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசமணிக்கு கடந்த ஜூலை 15 ஆம் தேதி கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அவர் சிட்ரா அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பின் வீடு திரும்பிய மாவட்ட ஆட்சியர் ராசாமணி வீட்டில் தன்னை தனிமைபடுத்திக்கொண்டார். இந்நிலையில் 26 நாட்களுக்கு பின் மீண்டும் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து தன் பணியை துவங்கினார்.

முன்னதாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் மாவட்ட வருவாய் அலுவலர், ஊரக வளர்ச்சி துறையில் திட்ட இயக்குனர் மற்றும் உயர் அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

மேலும் படிக்க