• Download mobile app
21 May 2025, WednesdayEdition - 3388
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கொரோனா இல்லாத கோவையை உருவாக்குவோம் – எஸ்.பி.வேலுமணி

September 12, 2020 தண்டோரா குழு

கோவையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. மொத்த பாதிப்பு 21 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்நிலையில், கொரோனா இல்லா மாநகராக கோவையை உருவாக்க தன்னார்வலர்களுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அழைப்பு விடுத்துள்ளார்.

இது குறித்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனது டுவிட்டர் பக்கத்தில்,

கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளிலும் #COVID19 தொற்றை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகத்துடன் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு ‘பொதுநலம் பேணு’ எனும் உயர்ந்த பண்போடு செயல்பட்டு வரும் தன்னார்வலர்கள் மற்றும் மாணவர்களுக்கு முதற்கண் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

கோவை மாநகரை #COVID19 நோய்த்தொற்று இல்லா மாநகராக மாற்றும் முயற்சியில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள விருப்பமுள்ள தன்னார்வலர்கள் மற்றும் மாணவர்கள் 96269 01753, 77085 92333 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு கொரோனாவுக்கு எதிரான கோவை மாநகராட்சியின் நடவடிக்கைகளில் பங்கேற்கலாம் என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க