• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கொரோனாவால் உயிரிழந்த பத்திரிகையாளர்களின் குடும்பத்திற்கு ₹10 லட்சம் இழப்பீடு – மு.க.ஸ்டாலின்

May 26, 2021 தண்டோரா குழு

கொரோனாவால் இறந்த பத்திரிகையாளர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

முன்களப் பணியாளர்களாக அறிவிக்கப்பட்ட பத்திரிகையாளர்கள் பலர் அடுத்தடுத்து கொரோனா தொற்றுக்கு பலியாகி வருகின்றனர். இந்நிலையில், தமிழகத்தில்பதிவு செய்யப்பட்ட, அரசால் அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், மற்றும் காலமுறை இதழ்கள், புகைப்படக்காரர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்களில் இறந்தவரின் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் இழப்பீட்டு தொகையாக வழங்கப்பட்டு வந்தது.தற்போது அந்த இழப்பீட்டு தொகையை ரூ.10 லட்சமாக உயர்த்தி முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

மேலும்,பத்திரிகை, ஊடகவியலாளர்களுக்கான சிறப்பு ஊக்கத்தொகை ரூ.3000இல் இருந்து ரூ.5000ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க