• Download mobile app
09 Nov 2025, SundayEdition - 3560
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கொரனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க கோரி இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்

June 9, 2020 தண்டோரா குழு

கொரனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்த அறைகூவல் விடுத்ததை தொடர்ந்து நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.இதன் ஒரு பகுதியாக கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தின் முன் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், முன்னாள் எம்எல்ஏ ஆறுமுகம் உள்ளிட்டோர் தலைமையில்
ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது,கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மாதம் ரூ 7.500 உடனடியாக வழங்க வேண்டும், சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு ஒரு லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்,மின் கட்டண கொள்ளையை நிறுத்தி யூனிட் கணக்கு இரண்டு மாதம் என பிரித்து கணக்கீடு,விவசாயிகளின் கடன்களை ரத்து செய் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேலும் படிக்க